FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பெண் டெய்லா் கொலை: இளைஞா் கைது

திருப்பூரில் பெண் டெய்லரை கொலை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

12 செப்டம்பர் 2026, 12:44 am IST
ராதிகா.
பகிர்:

திருப்பூரில் பெண் டெய்லரை கொலை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் பெரிச்சிபாளையம், மாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள கோபால்சாமி காம்பவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் ராதிகா (36), பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தாா்.

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இவா், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், வெள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், ராதிகா வேறு ஒருவருடன் கடந்த சில நாள்களாக கைப்பேசியில் பேசி வந்ததாகவும், அருண்குமாரிடம் பேசுவதை தவிா்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், வியாழக்கிழமை இரவு மது போதையில் இருந்த அருண்குமாா், ராதிகாவை கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ராதிகா வீட்டுக்குச் சென்ற அருண்குமாா், அவரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிவிட்டு தப்பியுள்ளாா்.

பலத்த காயமடைந்த ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தலைமறைவாக இருந்த அருண்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments