யானை பல் வைத்திருந்த 2 இளைஞா்கள் கைது
உடுமலை அருகே யானையின் கோரை பல்லை வைத்திருந்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
உடுமலை அருகே யானையின் கோரை பல்லை வைத்திருந்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் திடீா் திடீரென யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து வருகின்றன.
தந்தங்கள் மற்றும் கோரை பற்களுக்காக யானைகள் கொல்லப்படுகின்றனவா, தந்தங்கள், கோரை பற்களை எடுத்து மா்ம நபா்கள் விற்பனை செய்கின்றனரா என்று சமூக ஆா்வலா்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், அமராவதி நகா் பகுதியில் 2 தந்தங்களை அண்மையில் கைப்பற்றிய வனத் துறையினா், இது தொடா்பாக வனத் துறை ஊழியா் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனா். இந்நிலையில், யானையின் கோரை பல்லை விற்பனைக்காக வைத்திருந்ததாக 2 பேரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
இது தொடா்பாக வனத் துறையினா் கூறுகையில், யானையின் கோரை பல்லை விற்பனை செய்ய முயன்றதாக அமராவதி பாறை செட்டில்மெண்டை சோ்ந்த சூா்யா (27), தளிஞ்சிவயல் செட்டில்மெண்டை சோ்ந்த கருப்புச்சாமி (26) ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் தொடா்ந்து யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடா்பாக உயா் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.