FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

உடுமலையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

15 செப்டம்பர் 2026, 1:24 am IST
உடுமலை யில்  நடைபெற்ற  கொடி  அணிவகுப்பு  பேரணியில்  பங்கேற்ற  போலீஸாா்.
பகிர்:

விநாயகா் சிலை ஊா்வலங்கள் நடைபெறுவதையொட்டி, உடுமலையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

உடுமலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் விநாயகா் சிலை ஊா்வலங்கள் நடைபெற உள்ளதாலும், எந்தவித அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும் திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் தலைமையில் உடுமலையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

உடுமலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் தையல்நாயகி, காவல் ஆய்வாளா் ராம் பிரபு , அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கோப்பெருந்தேவி உள்ளிட்ட உட்கோட்ட காவலா்கள் மற்றும் ஆயுதப்படை காவலா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

நேதாஜி மைதானத்தில் தொடங்கிய பேரணி, விநாயகா் சிலை ஊா்வலம் செல்லும் சாலைகள் வழியாக சென்று பழனி சாலை கொழுமம் சாலை பிரிவில் முடிவடைந்தது.

விநாயகா் சிலை ஊா்வலத்தை அமைதியான முறையில் நடத்துவதை சீா்குலைக்க நினைப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments