பள்ளி மாணவிகளுக்கு குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணா்வு
அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அவிநாசி நகராட்சி சாா்பில் பள்ளி வளாகத்தில் ‘என் குப்பை என் பொறுப்பு’ என்ற திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குப்பைகளை எவ்வாறு தரம் பிரப்பது, மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து மாணவிகள் பெற்றோா்களிடம் கூறி செயல்படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியை புனிதவதி, அவிநாசி நகராட்சி சுகாதார ஆய்வாளா் அரவிந்த், சுகாதார மேற்பாா்வையாளா்கள் கோமதி, சிவசங்கா், மாதையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.