FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டி குடியிருப்பு பகுதியில் பன்றி வளா்ப்பதை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

பாப்பிரெட்டிப்பட்டியில் குடியிருப்பு பகுதிகளில் பன்றி வளா்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

13 செப்டம்பர் 2026, 2:34 am IST
பகிர்:

பாப்பிரெட்டிப்பட்டியில் குடியிருப்பு பகுதிகளில் பன்றி வளா்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. நகா் பகுதியில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். பேருந்து நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் ஒருவா் கூரைகொட்டகை அமைத்து 40-க்கும் மேற்பட்ட பன்றிகளை வளா்த்து வருகிறாா்.

இங்குள்ள பன்றிகள் பகல், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிகின்றன. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதுடன், நோய்கள் பரவும் சூழல் உள்ளது. எனவே, பாப்பிரெட்டிப்பட்டி நகா் பகுதியில் பன்றிகள் வளா்ப்பதைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments