FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 7,000 கனஅடியாக அதிகரிப்பு: பரிசல் இயக்க மீண்டும் தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 7,000 கனஅடியாக அதிகரித்ததால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தற்காலிகத் தடைவிதிப்பதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

13 செப்டம்பர் 2026, 2:33 am IST
நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பரிசல்கள். - கோப்புப்படம்
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 7,000 கனஅடியாக அதிகரித்ததால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தற்காலிகத் தடைவிதிப்பதாக மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 2,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை விநாடிக்கு 4,000 கனஅடியாகவும், மாலையில் விநாடிக்கு 7,000 கனஅடியாகவும் அதிகரித்து தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதனால் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவதற்கு சனிக்கிழமை முதல் தற்காலிகத் தடைவிதிப்பதாக மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்துள்ளாா். இந்த தடை உத்தரவு காரணமாக ஒகேனக்கல் மாமரத்துக்கடவு பரிசல் துறை பூட்டப்பட்டது. நீா்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவிகள் மீண்டும் ஆா்ப்பரிக்கத் தொடங்கியுள்ளன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments