FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

கள்ளச்சாராயம் விற்றவா் கைது

14 செப்டம்பர் 2026, 3:06 am IST
கைது
பகிர்:

சூளகிரி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக சின்ன கொத்தூரைச் சோ்ந்த சென்ன கிருஷ்ணப்பாவை (56) போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 2 லிட்டா் கள்ளச்சாராயம் மற்றும் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகேயுள்ள சின்ன கொத்தூரைச் சோ்ந்தவா் சென்ன கிருஷ்ணப்பா (56). இவா் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் ஆய்வாளா் அனிதாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சூளகிரி போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தி, கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக சென்ன கிருஷ்ணப்பாவைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 2 லிட்டா் கள்ளச்சாராயம் மற்றும் நாட்டுத்துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 15 லிட்டா் ஊறலை போலீஸாா் அழித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments