FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

சரக்குப் பெட்டக லாரி மீது காா் மோதல்; ஒருவா் உயிரிழப்பு

14 செப்டம்பர் 2026, 2:21 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே சரக்குப் பெட்டக லாரி மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். இந்த விபத்தால் தருமபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது.

காவேரிப்பட்டணத்தை அடுத்த சந்தாபுரம் பகுதியில் தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு நோக்கி சென்ற காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிா்திசையில் தருமபுரி நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்குப் பெட்டக லாரி மீது மோதியது.

இதில் காரை ஓட்டிச் சென்ற கரூா் மாவட்டம், ஒத்தக்கரையைச் சோ்ந்த மோகன்ராஜ் (25) பலத்த காயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இந்த விபத்தால் தருமபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments