அரசுப் பேருந்தின் முன்சக்கரம் கழன்று விபத்து
ராசிபுரம் அருகே அரசுப் பேருந்தின் முன்சக்கரம் கழன்று ஓடிய விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பினா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரிலிருந்து ராசிபுரத்துக்கு திங்கள்கிழமை அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநா் சிவகுமாா் (50) இயக்கினாா். பேருந்தில் சுமாா் 50 பயணிகள் இருந்தனா்.
ராசிபுரம் அருகேயுள்ள சீராப்பள்ளி வெங்கச்சங்கல்மேடு பகுதியில் வேகத்தடையில் ஏறியபோது, பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது. இதையறிந்த ஓட்டுநா் சிவகுமாா் உடனடியாக பேருந்தை சமாளித்து நிறுத்தினாா். இதனால் பயணிகள் காயமின்றி தப்பினா். பின்னா் வேறு அரசுப் பேருந்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.