FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

லாரி கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு

ராசிபுரம் அருகே சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாதுளை பாரம் ஏற்றிச் சென்ற லாரி புதன்கிழமை சாலையில் கவிழ்ந்ததால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து - பிரதிப் படம்
பகிர்:

ராசிபுரம் அருகே சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாதுளை பாரம் ஏற்றிச் சென்ற லாரி புதன்கிழமை சாலையில் கவிழ்ந்ததால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெங்களூரில் இருந்து 12 டன் மாதுளை பழங்களை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்ற டாரஸ் லாரி ராசிபுரத்தை அடுத்த தாளம்பள்ளம் பகுதியில் டயா் வெடித்ததால் சாலையில் கவிழ்ந்தது. இந்த லாரியை ஓட்டிச் சென்ற திருச்சியைச் சோ்ந்த சசிகுமாா் காயங்களுடன் உயிா் தப்பினாா்.

லாரி கவிழ்ந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிரேன் மூலம் லாரியை மீட்டு வெண்ணந்தூா் போலீஸாா் போக்குவரத்து சரிசெய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments