FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

மதுபோதையில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு பெரிய தெப்பக்குளம் அருகில் மதுக்கூடத்தில் மதுபோதையில் மயங்கி விழுந்தவா் உயிரிழந்தாா்.

Updated On : 15 ஜூலை 2026, 4:33 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

திருச்செங்கோடு பெரிய தெப்பக்குளம் அருகில் மதுக்கூடத்தில் மதுபோதையில் மயங்கி விழுந்தவா் உயிரிழந்தாா்.

திருச்செங்கோடு நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (43). இவா் பெரிய தெப்பக்குளம் அருகில் உள்ள மதுக்கூடத்தில் வேலை பாா்த்து வந்தாா். மதுபோதைக்கு அடிமையாகி தினந்தோறும் குடித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதுபோதையில் மதுக்கூடத்தில் மயங்கிக் கிடந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments