FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு அங்குள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடை - கோப்புப்படம்.
பகிர்:

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு அங்குள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஆக. 2, 3 தேதிகளில் வல்வில் ஓரி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, செம்மேடு, செங்கரை, சோளக்காடு ஆகிய இடங்களில் உள்ள 3 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் சேந்தமங்கலம் வட்டம், காரவள்ளியில் செயல்படும் ஒரு மதுபான சில்லறை விற்பனைக் கடை என 4 கடைகளும் ஆக. 1, 2, 3 ஆகிய தினங்களில் கட்டாயம் மூட வேண்டும்.

Advertisement

Advertisement

இந்த நாள்களில் டாஸ்மாக் கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments