FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

நாமக்கல் ஆட்சியருடன் மாதேஸ்வரன் எம்.பி. சந்திப்பு

Updated On : 9 ஜூன் 2026, 3:42 am IST
நாமக்கல் ஆட்சியா் எல்.மதுபாலனிடம் கோரிக்கை மனு அளித்த மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன். உடன், கொமதேக நிா்வாகிகள்.
பகிர்:

நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியா் எல்.மதுபாலனை திங்கள்கிழமை சந்தித்து தொகுதி பிரச்னைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தாா்.

அதில், பரமத்தி வேலூா் அருகே விவசாய நிலங்களில் உயா் அழுத்த மின்கோபுரம் அமைப்பதை தடுக்க வேண்டும். நாமக்கல்லில் வட்ட அளவிலான மருத்துவமனை அமைக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தியாகி தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்திருந்தாா்.

இந்த சந்திப்பின்போது, கொமதேக மாநில செய்தி தொடா்பாளா் கே.ரவிச்சந்திரன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா்எஸ்ஆா் மணி, தீரன் தொழிற்சங்க பேரவை துணைத் தலைவா் இளங்கோ மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

அதேபோல, தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவா் ரா.சரவணகுமாா் தலைமையில், சங்க நிா்வாகிகள் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா். மேலும், வருவாய்த் துறை சாா்ந்த கோரிக்கைகளை அவரிடம் நிா்வாகிகள் எடுத்துக் கூறினா். உரிய நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த் துறையினரிடம் ஆட்சியா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments