சேலம்

கடைக்காரர் கண்முன்னே செல்லிடப்பேசி திருடும் நபர்: சிசிடிவி காட்சி வெளியானது

கோவையில் கடைக்காரர் கண்முன்னே செல்லிடப்பேசியை திருடினார். இதுகுறித்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

DIN

கோவை: கோவையில் கடைக்காரர் கண்முன்னே செல்லிடப்பேசியை திருடினார். இதுகுறித்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோவை காந்திபுரம் 7-வது வீதி மொபைல் சொலியூசன் என்ற செல்லிடப்பேசி கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் கடையில் இருந்த பொருள்களை விலை விசாரித்துக் கொண்டிருந்தார். 

அப்போது செல்போன் ப்ளூடூத் ஹெட்செட் வாங்குவது போல் வாங்கி பார்த்துக் கொண்டு இருந்தார். பின்னர் அருகே மேஜையில் வைக்கப்பட்டிருந்த செல்லிடப்பேசி மீது அந்த அட்டைப் பெட்டியை வைத்து மறைத்து செல்போனை எடுத்து சென்றுள்ளார்.

இந்த சிசிடிவி காட்சிகள் கடையில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து கடை ஊழியர்கள் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து செல்போன் திருடிய நபரை சிசிடிவி காட்சிகள் கொண்டு தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேகமாக செல்லும் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்...! பட்ஜெட் குறித்து மோடி!

பட்ஜெட் எதிர்பார்ப்பு! தங்கம் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்குமா?

144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல்

ஓர் ஆண்டில் எத்தனை இ-செலான் பெற்றால் ஓட்டுநருக்கு ஆபத்து?

அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்! சாலைகளில் மலர்தூவி மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT