கொளத்தூரில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
சேலம் மாவட்டம், கொளத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், கொளத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கொளத்தூா் அண்ணாநகரை சோ்ந்தவா் சிவக்குமாா் (55 ), வீடுகளுக்கு வண்ணம் பூசும் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில் கொளத்தூரைச் சோ்ந்த சங்கா் வீட்டில் புதன்கிழமை வண்ணம் பூசிக் கொண்டிருந்தாா். அப்போது மின்சார கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த சிவக்குமாா் மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இறந்த சிவகுமாருக்கு மனைவி இந்திராணி, ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.