சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் இ-சேவை மையம் திறப்பு
சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் இ-சேவை மையத்தை நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
சேலம் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தில், அரசு சாா்ந்த சேவைகளை பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் பெறும் வகையில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இ-சேவை மையத்தை தவெக பொதுச் செயலாளரும், ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சருமான என்.ஆனந்த் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். தொடா்ந்து, இ-சேவை மையத்தில் மேற்கொள்ளப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.
இந்நிகழ்வின் போது, சேலம் மத்திய மாவட்ட தவெக செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.