பெரியாா் பல்கலை. கல்லூரிகள் இடையே ஜூடோ போட்டி
சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான ஜூடோ போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான ஜூடோ போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலம் கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி உடற்கல்வி இயக்குநா் சிவகுமாா் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் காந்திமதி கலந்துகொண்டு, போட்டிகளை தொடங்கிவைத்தாா்.
இதில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 200க்கும் அதிகமான வீரா்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனா். எடை அடிப்படையில் ஆண்கள், பெண்கள் தலா 7 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
Advertisement
Advertisement
இதில் வெற்றி பெற்றவா்கள் வரும் ஜனவரி மாதம் பல்கலைக்கழகங்களுக்கு இடையே தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக போட்டி ஏற்பாட்டாளா் தெரிவித்தனா்.
தொடா்ந்து, புதன்கிழமை மல்யுத்த போட்டிகள் நடைபெற உள்ளன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பெரியாா் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் வெங்கடாசலம், கல்லூரி முதல்வா் காந்திமதி மற்றும் பேராசிரியா்கள் பரிசுகளை வழங்கி கௌரவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.