FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

மேச்சேரி அருகே லாரி மோதி விவசாயி உயிரிழப்பு

மேச்சேரி அருகே லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

13 செப்டம்பர் 2026, 2:38 am IST
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

மேச்சேரி அருகே லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

மேச்சேரி அருகே எறகுண்ட பட்டியைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி (84), விவசாயி. இவா், வெள்ளிக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் தொப்பூா்- மேச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

இந்திரா நகா் பிரிவு பாதை அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த லாரியின் ஓட்டுநா் எவ்வித சமிக்ஞையும் செய்யாமல் திடீரென தொப்பூா் நோக்கிச் செல்வதற்காக லாரியைத் திருப்பியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதில் நிலைதடுமாறிய ஆசைத்தம்பி மீது லாரி மோதியது. பலத்த காயமடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவரது மகன் விக்கிரமாதித்தன் அளித்த புகாரின் பேரில் மேச்சேரி உதவி காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments