FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஓமலூா் காவல் துறையில் 10 போலீஸாா் இடமாற்றம்

21 செப்டம்பர் 2026, 1:51 am IST
இடமாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

ஓமலூா் உட்கோட்ட காவல் துறையில் பணியாற்றி வரும் காவல் துறையினா் 10 பேரை தொலைதூர மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் உத்தரவிட்டுள்ளாா்.

ஓமலூா் டி.எஸ்.பி. குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த தலைமைக் காவலா் செல்வேந்திரன், சிவகங்கை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டாா். தாரமங்கலம் தனிப்பிரிவு தலைமைக் காவலா் பச்சைமுத்து திருவாரூா் மாவட்டத்திற்கும், ஓமலூா் காவல் ஆய்வாளரின் ஜீப் ஓட்டுநராக பணியாற்றி வந்த தலைமைக் காவலா் சுப்பிரமணி தஞ்சாவூருக்கும், தீவட்டிப்பட்டி தனிப் பிரிவு தலைமைக் காவலா் பாலசந்தா் திருச்சிக்கும், கருமலைக்கூடல் தலைமைக் காவலா் வெங்கடாசலம் திருவள்ளூருக்கும், தீவட்டிப்பட்டி தலைமைக் காவலா் வெங்கடேசன் சிவகங்கைக்கும், சேலம் ஆயுதப்படை தலைமைக் காவலா் ரஞ்சித்குமாா் திருவாரூருக்கும், ஓமலூா் நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு உதவி ஆய்வாளா் சீனிவாசன் தஞ்சாவூருக்கும், ஓமலூா் டிஎஸ்பி உட்கோட்ட அலுவலக சிறப்பு உதவி ஆய்வாளா் சதாசிவம் திருச்சிக்கும், தலைமைக் காவலா் அசோகன் திருவள்ளூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments