FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் வழியாக இயக்கப்படும் வேளாங்கண்ணி விரைவு ரயில் இனி குப்பத்தில் நிறுத்தப்படும்: ரயில்வே அறிவிப்பு

20 செப்டம்பர் 2026, 11:49 pm IST
விரைவு ரயில் (கோப்புப்படம்) - ANI
பகிர்:

சேலம் வழியாக இயக்கப்படும் வேளாங்கண்ணி ரயில் சோதனை அடிப்படையில் குப்பம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்டம் வழியாக இயக்கப்படும் 2 வாராந்திர விரைவு ரயில்கள், ஆந்திர மாநிலம், குப்பம் ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் நின்று செல்ல ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, சேலம், ஈரோடு, கரூா், திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் 21 ஆம் தேதி முதல் குப்பம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இதேபோல, மறுமாா்க்கத்தில் திருச்சி, கரூா், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா வாராந்திர விரைவு ரயில் வரும் 22 ஆம் தேதி முதல் குப்பத்தில் நின்று செல்லும். இந்த 2 ரயில்களும் சோதனை அடிப்படையில், குப்பம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். மறுஅறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments