கொடைக்கானல் கிறிஸ்தவக் கல்லூரியில் கருத்தரங்கம்
கொடைக்கானல் கிறிஸ்தவக் கல்லூரியில் பணமற்ற பொருளாதாரத்தை நோக்கிய இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் கிறிஸ்தவக் கல்லூரியில் பணமற்ற பொருளாதாரத்தை நோக்கிய இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு கல்லூரித் தாளாளர் சாம்ஆப்ரகாம் தலைமை வகித்துப் பேசினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக முதன்மை ஆலோசகர் செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பணமில்லாமல் செயலிகளின் உதவியோடு பணப் பரிமாற்றம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்துப் பேசினார். மேலும் கருத்தரங்கில் பேராசிரியர்கள் ஆன்சி, விஜயரகுநாதன், பிரசாந்த், எபிதாமஸ் உள்ளிட்ட பலர் பேசினர். கருத்தரங்கில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி, கொடைக்கானல் கிறிஸ்தவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.