தலைமைக் காவலா் குடும்பத்துக்கு ரூ.28.08 லட்சம் நிதி அளிப்பு
ஒட்டன்சத்திரம் அடுத்த இடையகோட்டை காவல் நிலையத்தில் பணியின்போது இறந்த தலைமைக் காவலா் குடும்பத்துக்கு சனிக்கிழமை ரூ.28.08 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் அடுத்த இடையகோட்டை காவல் நிலையத்தில் பணியின்போது இறந்த தலைமைக் காவலா் குடும்பத்துக்கு சனிக்கிழமை ரூ.28.08 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்தவா் பி. சரவணன் (42). இவா், கடந்த டிசம்பா் மாதம் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தாா்.
இதையடுத்து, ரெட்டியாா்சத்திரம் அடுத்த நீலமலைக்கோட்டை பகுதியில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு உதவும் வகையில், காவலா் உதவும் கரங்கள் குழு சாா்பில் நிதி திரட்டும் பணி நடைபெற்றது.
Advertisement
Advertisement
கடந்த 2003-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த காவலா்கள் உள்பட மொத்தம் 5,523 போ் மூலம் ரூ.28.08 லட்சம் நிதி வசூலிக்கப்பட்டது. இந்த தொகை, இறந்த சரவணன் குடும்பத்தினரிடம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.