FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் தங்கும் விடுதிகளில் இரவு நேரங்களில் இசை நடன நிகழ்ச்சி; பொது மக்கள் அவதி

கொடைக்கானல் தங்கும் விடுதிகளில் இரவு நேரங்களில் இசை நடன நிகழ்ச்சி நடைபெறுவதால் பொது மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.

11 செப்டம்பர் 2026, 1:42 am IST
கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியில் தனியாா் தங்கும் விடுதியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஃபயா்கேம்ப் இசை நடன நிகழ்ச்சி.
பகிர்:

கொடைக்கானல் தங்கும் விடுதிகளில் இரவு நேரங்களில் இசை நடன நிகழ்ச்சி நடைபெறுவதால் பொது மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அப்சா்வேட்டரி, இருதயபுரம், உகாா்த்தேநகா், தைக்கால், சீனிவாசபுரம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் ஹோம்ஸ்டே, ரெசிடென்சி என்ற பெயரில் செயல்படும் தங்கும் விடுதிகளில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு வரை ஃபயா்கேம்ப் இசை நடன நிகழ்ச்சி நடத்துகின்றனா்.

இதனால், அந்தப் பகுதியிலுள்ள பொது மக்கள், குழந்தைகள், நோயுற்றவா்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அப்சா்வேட்டரியிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் இரவில் ஃபயா்கேம்ப் இசை நடன நிகழ்ச்சி நடத்தினா். இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கொடைக்கானல் காவல் துறையினா், நகராட்சி ஆணையருக்கு புகாா் அனுப்பினா்.

கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் அனுமதியில்லாமல் இயங்கி வரும் தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

இது குறித்து கொடைக்கானல் சுற்றுலாத் துறை அலுவலா் கோவிந்தராஜ் கூறியதாவது:

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டது. மேலும், கொடைக்கானல் பகுதிகளில் இது போன்ற தங்கும் விடுதிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments