FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

ஸ்ரீரங்கம் கோயில் உத்திர வீதிகளில் கழிப்பறைகள் கட்ட இடைக்காலத் தடை

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வடக்கு, கிழக்கு உத்திர வீதிகளில் கழிப்பறைகள் கட்டுவதற்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

Updated On : 20 செப்டம்பர் 2024, 1:05 am IST
பகிர்:

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வடக்கு, கிழக்கு உத்திர வீதிகளில் கழிப்பறைகள் கட்டுவதற்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் நகா் நலக் கூட்டமைப்புத் தரப்பில் தாக்கல் செய்த பொது நல மனு:

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி 7 பிரகாரங்கள் உள்ளன. இதில் மூன்று பிரகாரங்களைச் சுற்றி குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இதில் உத்திர வீதிகளில் ஸ்ரீரங்கநாத சுவாமி விழா காலங்களில் வலம் வருவது வழக்கம்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மாநகராட்சி சாா்பில் வடக்கு, கிழக்கு உத்திர வீதிகளில் பொதுக் கழிப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்தப் பகுதிகளில் நிரந்தரக் கழிப்பறைகள் கட்டுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படும்.

இந்தச் சூழலில், ஒப்பந்ததாரா் உத்திர வீதிகளில் கழிப்பறைகளை கட்டுவதற்காக பள்ளம் தோண்டி வருகிறாா். எனவே, இந்தப் பகுதியில் பொதுக் கழிப்பறைகள் கட்ட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்ரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு, கிழக்கு உத்திர வீதிகளில் கழிப்பறைகள் கட்டும் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடா்பாக திருச்சி மாநகராட்சி ஆணையா், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments