மீன்வளத் துறை உதவி இயக்குநருக்கு ஆட்சியர் பாராட்டு
மீனவர்கள் மற்றும் படகுகள் மீட்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட மண்டபம் மீன் வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத்துக்கு
மீனவர்கள் மற்றும் படகுகள் மீட்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட மண்டபம் மீன் வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத்துக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் புதன்கிழமை வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற பின்னர் விசைப்படகுகள் மற்றும் மீனவர்கள் மீட்பு நடவடிக்கை மற்றும் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தருவது போன்ற செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக ராமநாதபுரத்தில் நடைபெற்ற 72 ஆவது சுதந்திர தின விழாவில் இச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ்மீனா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.