நம்புதாளை தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றம்
ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் மகான் பல்லாக்கு ஒலியுல்லா தர்ஹாவின் கந்தூரி விழா கொடியேற்றம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் மகான் பல்லாக்கு ஒலியுல்லா தர்ஹாவின் கந்தூரி விழா கொடியேற்றம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
முன்னதாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக முஸ்லிம்கள் விழாக் கொடியுடன் ஊர்வலமாக சென்றனர். தர்காவை வந்தடைந்ததும் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கந்தூரி விழா வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும். இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டினை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.