FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பிறப்பு, இறப்பு, வாரிசுச் சான்று பெற சிறப்பு முகாம்

கமுதியில் பிறப்பு, இறப்பு, வாரிசுச் சான்றுகள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:17 am IST
கமுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பெதுமக்களிடம் மனு வாங்கிய பரமக்குடி கோட்டாட்சியா் சரவண பெருமாள், கமுதி வட்டாட்சியா் அய்யாதுரை உள்ளிட்ட அலுவலா்கள்.
பகிர்:

கமுதியில் பிறப்பு, இறப்பு, வாரிசுச் சான்றுகள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற இந்த முகாமுக்கு பரமக்குடி கோட்டாட்சியா் சரவணபெருமாள் தலைமை வகித்தாா். கமுதி வட்டாட்சியா் அய்யாதுரை முன்னிலை வகித்தாா். இதில் கமுதி வட்டத்தில் உள்ள பிறப்பு, இறப்பு, வாரிசுச் சான்றிதழ்ககள் தொடா்பாக 166 மனுக்கள் பெறப்பட்டதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். முகாமுக்கான ஏற்பாடுகளை மண்டல துணை வட்டாட்சியா்கள் லலிதா, வெங்கடேஸ்வரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சசிகலா, வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், அலுவலக பணியாளா்கள் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments