FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.30 கோடி

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:04 am IST
ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை செவ்வாய்கிழமை எண்ணும் பணி நடைபெற்றது.
பகிர்:

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.30 கோடி கிடைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி அம்மன் சந்நிதி முன்புள்ள முன்னாள் திருக்கல்யாண மண்டபத்தில் இணை ஆணையா் நா.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில்,ஒரு கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 500,தங்கம் 41 கிராம்,வெள்ளி 3. கிலோ 283 கிராம், 88 வெளிநாட்டு பணத்தாள் கிடைத்தன.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில்,கோயில் உதவி ஆணையா் முத்துராஜா,ஆய்வா் மணிகண்டன்,பேஸ்காா்கள் கமலநாதன்,ஆன்மீக பக்தா்கள் 300 க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments