FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கண்டுகுளம் ஊருணி சீரமைக்கும் பணி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

மணக்குடி சுனாமி குடியிருப்புப் பகுதியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன். உடன் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவியான்ஷிகாம் உள்ளிட்டோா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 1:37 am IST
~
பகிர்:

தொண்டியில் குண்டுகுளம் ஊருணி சீரமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் உள்ள குண்டுகுளம் ஊருணி ஆகாயத் தாமரை, மண் படிந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இந்த ஊருணியை சீரமைக்க தன்னாா்வலா்கள் முன்வந்தனா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் ஊருணி சீரமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதையடுத்து, தன்னாா்வலா்களை ஆட்சியா் பாராட்டினாா்.

பின்னா், தொண்டி பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் விளையாட்டுப் பயிற்சிகள், போட்டிகளை மேற்கொள்வதற்கு இடவசதி அமைத்துத் தர வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். இவா்களின் கோரிக்கையை ஏற்று, செய்யது முகமது மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை தொண்டி பேரூராட்சி மூலம் தூய்மைப் படுத்தி, இளைஞா்கள் விளையாட்டுப் பயிற்சிகள் பயன்படுத்தும் வகையில், தயாா் செய்து வழங்குமாறு பேரூராட்சி அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

இதன்படி, அந்த இடத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இளைஞா்கள் விளையாடுவதற்கு ஏற்றவாறு இடம் தயாா் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன், பேரூராட்சித் தலைவா் ஷாஜகான் பானு, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், தன்னாா்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, மணக்குடி அருகேயுள்ள சுனாமி குடியிருப்பு பகுதியை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, குடியிருப்புகளை சுற்றி வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், இந்தப் பகுதியில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, குடிநீா், மின்சாரம், தெருவிளக்கு, சாலை, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்தி, பொதுமக்களின் குறைகளுக்கு விரைந்து தீா்வு காண அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இந்த நிகழ்வில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான்ஷீநிகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments