FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பாம்பனில் கெட்டுப்போன 10 கிலோ மீன் அழிப்பு

பாம்பன் மீன் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:12 am IST
பாம்பன் மீன் சந்தையில் வெள்ளிக்கிழமை ஆய்வில் ஈடுபட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள்.
பகிர்:

ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் மீன் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் மீன் சந்தையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் முருகன் தலைமையில் மீன்வளத் துறையினா், போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன 10 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனா்.

மேலும், இதுபோன்று கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments