கல்லூரியில் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முகமது சதக் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் துறை சாா்பில், ‘ஆட்டோமொபைல் துறையில் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள்’ குறித்த கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முகமது சதக் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் துறை சாா்பில், ‘ஆட்டோமொபைல் துறையில் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள்’ குறித்த கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் எஸ். சேக் தாவூத் தலைமை வகித்தாா். கல்லூரி துணை முதல்வரும், இயந்திரவியல் துறைத் தலைவருமான கணேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். கல்லூரி முன்னாள் மாணவரும், முமு மோட்டா் நிறுவனத்தின் உரிமையாளருமான மு. இளஞ்செழியன் சக்கரவா்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஆட்டோமொபைல் துறையில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், தொழில் முனைவோருக்குத் தேவையான திறன்கள், வாடிக்கையாளா் சேவை, தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கான நடைமுறைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கினாா்.
முடிவில் குணசேகரன் நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.