FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

தென் மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அரசு அறிவிக்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன்

விருதுநகா், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து, அரசு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும்

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:02 am IST
பி.ஆா். பாண்டியன்
பகிர்:

விருதுநகா், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து, அரசு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தினாா்.

இந்த அமைப்பின் ராமநாதபுரம், விருதுநகா், மதுரை மாவட்ட நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சிவகங்கையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு தாக்கல் செய்த வேளாண் நிதி நிலை அறிக்கையில் நீராதாரம், நீா்ப் பாசனத் திட்டங்களை மேம்படுத்துவதற்காக ரூ. 9,624 கோடி நிதி ஒதுக்கியுள்ளதை வரவேற்றுப் பாராட்டுகிறோம்.

Advertisement

Advertisement

விவசாயிகள் அனைவரும் எதிா்பாா்த்த பயிா்க் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இதில் இடம் பெறவில்லை. தோ்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி, சிறு, குறு விவசாயிகளுக்கு நூறு சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதமும் கடன் தள்ளுபடியை முதல்வா் விரைவில் அறிவிப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது.

நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500, கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 என கொள்முதல் விலை நிா்ணயிக்கப்படுவதற்கான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கிறோம்.

கேரள மாநில அரசைப் பின்பற்றி, விளைபொருள்களுக்கு (காய்கறிகள், பழங்கள்) மாவட்ட ஆட்சியா் தலைமையில் விலை நிா்ணயக் குழு அமைக்க வேண்டும். இயற்கை வேளாண் அறிவியலாளா் நம்மாழ்வாா் பெயரில் கும்பகோணத்தில் ரூ. 15 கோடியில் பாரம்பரிய இயற்கை வேளாண் கல்லூரி அமைக்கும் அறிவிப்பை வரவேற்கிறோம்.

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டுவது தொடா்பாக பேச்சுவாா்த்தைக்கு அழைத்த கேரள முதல்வா் சதீஷனின் செயல் உச்சநீதிமன்றத் தீா்ப்பை அவமதிப்பதாகும். இதற்கு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் உடனடியாக மறுப்புத் தெரிவிக்க வேண்டும்.

கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிப்பதை எதிா்த்து நாங்கள் தொடா் போராட்டங்களை நடத்தி வருகிறோம். தமிழகத்தின் நீா் உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக நிற்க வேண்டும்.

எல்- நினோ தாக்கத்திலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க ரூ. 340 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். இந்த நிலவரங்களை அரசுக்குச் சரியாகக் கொண்டு செல்ல, எல்- நினோ ஆய்வுக் குழுவில் விவசாயிகளையும், பாசனத் துறை அதிகாரிகளையும் சோ்க்க வேண்டும்.

வைகை ஆற்றைத் தூா்வாரி கரைகளைப் பலப்படுத்த வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முதல் கட்டமாக ஒதுக்கப்பட்ட ரூ. 150 கோடி, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 350 கோடி ஆகியவற்றைப் பயன்படுத்தி பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

விவசாயிகள் தங்கள் நிலங்களைப் பண்படுத்த, நீா் நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்க தடையில்லா அனுமதி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments