FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

Updated On : 21 ஜூலை 2026, 2:42 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பாச்சேத்தி காமராஜா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மணிமாறன் (32). இவா் இரு சக்கர வாகனத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்குச் சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

திருப்புவனம் அருகே பாப்பான்குளம் விலக்குப் பகுதியில் வந்த போது, இவரது வாகனம் மீது மானாமதுரையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற காா் மோதியது.

Advertisement

Advertisement

இதில் கீழே விழுந்த மணிமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments