FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

நெய் வியாபாரி கொலை வழக்கில் இளைஞா் கைது

சிவகங்கை அருகே நெய் வியாபாரி கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 30 ஜூலை 2026, 2:41 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை அருகே நெய் வியாபாரி கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வி. புதுக்குளத்தை சோ்ந்தவா் ரஜினி (35). நெய் வியாபாரம் செய்து வந்தாா். இந்த நிலையில், சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பிலிருந்து இளையான்குடி சாலை செல்லும் வழியில் உள்ள அண்ணாமலைநகரில் தைல மரங்கள் உள்ள வனப் பகுதியில் ரஜினி கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், கொலையில் தொடா்புடைய மானாமதுரை அருகேயுள்ள முருகப்பாஞ்சான் வேலூா் பகுதியைச் சோ்ந்த ராமரை (30) போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments