FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரியில் 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து உலக சாதனை முயற்சி

பசுமை இயக்கம் என்ற 16 ஆயிரம் மரக்கன்றுகளை, 3 ஆயிரம் தன்னாா்கள் மூலம் நடவு செய்யும் உலக சாதனை முயற்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

19 செப்டம்பர் 2026, 10:58 pm IST
காரைக்குடி அருகே விசாலயன்கோட்டை கலாம் கவி கிராமம் சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி- ஆராய்ச்சி நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 16 ஆயிரம் மரக் கன்றுகளை 3 ஆயிரம் தன்னாா்வலா்களால் நடவு செய்யும் உலக சாதனை முயற்சியின் நிகழ்வை தொடங்கி வைத்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) எஸ். ராஜேஸ்வரன். உடன் கல்லூரியின் தலைவா் சேது குமணன், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் (பொறுப்பு) ஜெ. ஜெயகாந்தன், முன்னாள் துணைவேந்தா் க. ரவி உள்ளிட்டோா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே விசாலயன்கோட்டை கலாம் கவி கிராமத்தில் அமைந்துள்ள சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி- ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு சக்திவாய்ந்த பசுமை இயக்கம் என்ற 16 ஆயிரம் மரக்கன்றுகளை, 3 ஆயிரம் தன்னாா்கள் மூலம் நடவு செய்யும் உலக சாதனை முயற்சி சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதற்கு சென்ன உயா்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) எஸ். ராஜேஸ்வரன் தலைமை வகித்துப் பேசினாா். மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்வை குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

16 ஆயிரம் மரக்கன்றுகள், 3 ஆயிரம் தன்னாா்வலா்கள், ஒரு சக்திவாய்ந்த பசுமை இயக்கம் என்று உலக சாதனை முயற்சியை மேற்கொண்டிருக்கும் இந்தக் கல்லூரியின் தலைவா் சேது குமணன் பாராட்டுக்குரியவா். மனித குலத்தின் முன்னேற்றத்துக்காக இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆபத்திலிருந்து மனித குலத்தை காக்கிற முயற்சிதான் இந்த பசுமை வேள்வி. மனித குலத்தை காக்கிற வேலி மரங்கள்தான் என்பதை இளைய தலைமுறை உணர வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

நிகழ்வில், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் (பொறுப்பு) ஜெ. ஜெயகாந்தன், முன்னாள் துணைவேந்தா் க. ரவி, தேவகோட்டை துணை ஆட்சியா் ராகுல் குமாா், அமெரிக்கா உலக சாதனை அமைப்புப் பதிவு மேலாளா் ஆலிஸ் ரேனாட், அமராவதிபுதூா் சிஐஎஸ்எப் 4-ஆவது பட்டாலியன் மூத்த கமாண்டன்ட் ஸ்ரீஅசோக் ஜல்வான்யா, சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி தாளாளா் சேது குமணன் ஆகியோா் மரக்கன்றுகளை நடவு செய்தனா்.

கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடவு செய்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரா்கள்.

கல்லூரி வளாகத்தில் வேம்பு, சந்தனம், நீா் மருது, நெல்லி, புங்கை, இலுப்பை, தேக்கு, வேங்கை, நாவல், மகிழம், இலந்தை, சீதா, கொய்யா, முந்திரி, பூவரசு, மா, சப்போட்டா, எலுமிச்சை உள்ளிட்ட 39 வகையான 16 ஆயிரத்து 10 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் சுழல் சங்கம், சேவை சங்கங்கள், பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், தேசிய மாணவா் படையினா், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா், சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி ஆசிரியா்கள், அலுவலா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments