FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேனியில் இன்று சமையல் எரிவாயு உருளை  நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு, சமையல் எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு, சமையல் எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 
மாவட்ட வருவாய் அலுவலர் ச. கந்தசாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் துறை அலுவலர்கள், எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் அலுவலர்கள் மற்றும் முகவர்கள் பங்கேற்கின்றனர்.
இதில், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழு பிரதிநிதிகள் கலந்துகொண்டு, சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய சமையல் எரிவாயு உருளை இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் ஆகியன குறித்து மனு அளித்து தீர்வு காணலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments