FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தாமரைக்குளம் கண்மாய்க் கரையில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா?

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கண்மாய்க் கரையில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதால் குடிநீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கண்மாய்க் கரையில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதால் குடிநீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தாமரைக்குளம் கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் உறைகிணறு அமைக்கப்பட்டு தாமரைக்குளம் மற்றும் வடுகபட்டி பேரூராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதோடு, இக்கண்மாய் மூலம் 200 மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.  
இந்நிலையில், பெரியகுளம் நகராட்சி,தென்கரை பேரூராட்சி, தாமரைக்குளம் பேரூராட்சி கழிவுநீர் சங்கமிக்கும் இடமாக கண்மாய் மாறியுள்ளது. இதனால் கண்மாய் தண்ணீர் மாசடைந்து வருகிறது. 
 இது குறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். 
மேலும் பெரியகுளம் பகுதியில் உள்ள மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை  தாமரைக்குளம் கண்மாய் கரைகளில் கொட்டி செல்கின்றனராம். இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளாலும் கண்மாய் நீர் மாசடைகிறது. மேலும் மருத்துவமனைகைளில் அகற்றப்படும்  உடல்உறுப்புக்களையும் இப்பகுதியில் வீசி செல்கின்றனராம். 
இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாய் கரைகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது குறித்து பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தது:  சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, காவல் நிலையத்தில் புகார் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments