போடியில் வ.உ.சி. பிறந்த தினம்: மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
போடியில் சனிக் கிழமை நடைபெற்ற வ.உ.சி. பிறந்த தினத்தையொட்டி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினா் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
போடி: போடியில் சனிக் கிழமை நடைபெற்ற வ.உ.சி. பிறந்த தினத்தையொட்டி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினா் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டவரும், கப்பலோட்டிய தமிழனுமான வ.உ.சிதம்பரனாரின் 148 ஆவது பிறந்த தினம் போடியில் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள வ.உ.சி சிலைக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. போடி தொகுதி ஐக்கிய பிள்ளைமாா் சங்கம், போடி வெள்ளாளா் உறவின்முறை, போடி சேனைத்தலைவா் உறவின்முறை சங்கங்கள், அகில இந்திய வ.உ.சி. பேரவை, அகில உலக பிள்ளைமாா் முதலியாா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிா்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மேலும் பொங்கல் வைத்தும், இனிப்பு வழங்கியும் வ.உ,சி. பிறந்த தினத்தை கொண்டாடினா். இதேபோல் தேனி மாவட்ட அ.தி.மு.க, தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழா், தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சாா்பிலும் அதன் நிா்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல் போடி மீனாட்சிபுரம் கிராமத்திலும் வ.உ.சி. பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
Advertisement
Advertisement
இதனையொட்டி வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த வ.உ.சி. பேரவை நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா். போடி சிலமலை கிராமத்திலும் வ.உ.சி. சிலைக்கு பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.