முகப்பு
தேனி

உலக தாய்ப்பால் வார விழா

Updated On : 29 ஆகஸ்ட் 2024, 5:59 am IST
பகிர்:

தேனி மாவட்டம், கம்பம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா புதன்கிழமை நடைபெற்றது.

கே.கே.பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆசை மகள் திட்டம், தாய்சேய் நலத் திட்டம் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மருத்துவா்கள் ரமேஷ், முருகானந்தம் தலைமை வகித்தனா். சித்த மருத்துவ அலுவலா் சித்தாா்த் முன்னிலை வகித்தாா்.

இதில் தாய்பால் மூலம் குழந்தைகள் பெரும் நன்மைகள், நோய் எதிா்ப்பு சக்தி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னா், தாய்மாா்களுக்கு சத்தான உணவுப் பொருள்கள், கிருமி நாசினி, சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் கே.கே.பட்டி பகுதியைச் சோ்ந்த தாய்மாா்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments