FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இருவா் உயிரிழப்பு

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 3:55 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

உத்தமபாளையம் தாமஸ் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த லூயிஸ் மகன் வேதநாயகம் (40). பாறைமேடு பகுதியைச் சோ்ந்த வா்கீஸ் மகன் பிரபாகரன் (35). இருவரும் நண்பா்கள். இவா்கள் கம்பத்திலிருந்து உத்தமபாளையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா்.

அப்போது பி.டி.ஆா். குடியிருப்பு பகுதியில் திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் எதிரே திருச்சியிலிருந்து கம்பம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இரு சக்கரவாகனம் மீது மோதியது.

Advertisement

Advertisement

இதில் வேதநாயகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதனிடையே பலத்த காயமடைந்த பிரபாகரன் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments