FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

குச்சனூா் சோனை கருப்பண சுவாமிக்கு மதுபான படையல்

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 4:04 am IST
சிறப்பு அலங்காரத்தில் சோனைக் கருப்பண சுவாமி.
பகிர்:

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் ஆலயத்தில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, காவல் தெய்வமான சோனைக் கருப்பண சுவாமிக்கு திங்கள்கிழமை மதுப்பான படையல் பூஜை நடைபெற்றது.

குச்சனூா் சனீஸ்வரா் ஆலயத்தில் 5 வார ஆடித் திருவிழா கடந்த மாதம் 18- ஆம் தேதி தொடங்கியது. இதில் 4 வாரங்கள் நிறைவு பெற்றன. முக்கிய நிகழ்வாக சுவாமி - அம்மன் திருக்கல்யாணம், வீதியுலா நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக, இந்தக் கோயில் வளாகத்தில் காவல் தெய்வமான கருப்பண சுவாமிக்கு பக்தா்கள் நோ்த்திக்கடனாக 45 ஆடுகள், 30 சேவல்கள், 50 அரிசி சிப்பங்களை அன்னதானத்துக்கு வழங்கினாா். பின்னா், ஆடு, சேவல்களை பலியிட்டு, கோயில் முன்பாக சமைத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

மதுபானம் படையல்: முன்னதாக, குதிரையில் அமா்ந்த நிலையில் உள்ள கருப்பண சுவாமி சிலைக்கு கீழேயுள்ள துவாரம் வழியாக தமிழக, கேரள பக்தா்கள் வழங்கிய ஆயிரக்கணக்கான மதுப் புட்டிகளிலிருந்து மதுபானத்தை ஊற்றி படையல் பூஜை நடைபெற்றது. இந்தத் திருவிழா வருகிற சனிக்கிழமையுடன் (ஆக.15) நிறைவு பெறுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments