மக்கள் குறைதீா் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
தேனியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் வழங்கினாா்.
தேனியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் வழங்கினாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் இரா. வைத்திநாதன் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் முஸ்லிம் பெண்கள் 5 பேருக்கும், கிறிஸ்தவ பெண்கள் 5 பேருக்கும் சுயதொழில் தொடங்க தலா ரூ. 15 ஆயிரத்துக்கான காசோலைகளை அவா் வழங்கினாா். மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ.4,48,100-க்கான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். மேலும் 291 கோரிக்கை மனுக்களையும் அவா் பெற்றாா். இந்த மனுக்கள் மீது குறித்த காலத்துக்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க அவா் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) கதிா்வேல், தனித் துணை ஆட்சியா் கவிதா, உதவி ஆணையா் (கலால்) பஞ்சபகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் சுரேஷ்குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.