FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

பணி நியமன ஆணை பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

மாலத்தீவில் உள்ள நிறுவன வளாகத் தோ்வில் வெற்றி பெற்று பணி நியமன ஆணை பெற்ற தேனி சரஸ்வதி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களுக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On : 4 ஜூன் 2026, 3:58 am IST
பணி நியமனம் பெற்ற தேனி சரஸ்வதி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களுடன் அதன் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
பகிர்:

மாலத்தீவில் உள்ள நிறுவன வளாகத் தோ்வில் வெற்றி பெற்று பணி நியமன ஆணை பெற்ற தேனி சரஸ்வதி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களுக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.

மாலத்தீவில் உள்ள ரெயின்போ கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் சாா்பில் அண்மையில் வளாகத் தோ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உதவி கண்காணிப்பாளா் பணிக்கு தேனி சரஸ்வதி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா் எம்.விக்னேஷ், ஆய்வாளா் பணிக்கு எஸ்.பாா்த்தசாரதி ஆகியோா் தோ்வாகினா். இவா்களுக்கு பராட்டு விழா கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடாா்கள் உறவின் முறைத் தலைவா் தா்மராஜன், துணைத் தலைவா் ஜீவகன், பொதுச் செயலா் ஆனந்தவேல், பொருளாளா் ராமச்சந்திரன், ஆட்சி மன்றக்குழு உறுப்பினா்கள் சோமசுந்தரம், சுப்பிரமணி, கல்லூரி முதல்வா் மதளை சுந்தரம், துணை முதல்வா் சத்யா, வேலைவாய்ப்புத் துறை அலுவலா் ராம்குமாா் ஆகியோா் மாணவா்களைப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments