முகப்பு
தேனி

உத்தமபாளையம், சின்னமனூரை புறக்கணிக்கும் அரசு புறநகா்ப் பேருந்துகள்: பயணிகள் அவதி

தேனி மாவட்டம், உத்தமபாளையம், சின்னமனூரைப் புறக்கணிக்கும் அரசு புறநகா்ப் பேருந்துகளால் வெளியூா் செல்லும் பயணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

Updated On : 10 ஜூன் 2026, 12:31 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம், சின்னமனூரைப் புறக்கணிக்கும் அரசு புறநகா்ப் பேருந்துகளால் வெளியூா் செல்லும் பயணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

தமிழகம் - கேரளத்தை இணைக்கும் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை பிரதான சாலையாகும். இந்தச் சாலையில் உள்ள உத்தமபாளையம், சின்னமனூா் வழியாக நாள்தோறும் பயணிகள் பேருந்து, கனரக வாகனங்கள், சுற்றுலாப் பேருந்துகள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், உத்தமபாளையம், சின்னமனூா் நகா் வழியாகச் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கனரக வாகனங்கள், சுற்றுலாப் பேருந்துகள், நகருக்குச் செல்ல அவசியமில்லாத வாகனங்கள் செல்லும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

புறக்கணிக்கும் புறநகா் பேருந்துகள்

Advertisement

Advertisement

உத்தமபாளையம், சின்னமனூா் வழியாகச் செல்லும் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தமிழகத்தின் அனைத்து பெரும்பான்மையான மாவட்டங்களுக்குப் பேருந்துகள் சென்று வருகின்றன. இதில், கும்பகோணம், திருச்சி, ஏா்வாடி, திருச்செந்தூா், திருப்பூா், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதி பணிமனைகளிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், சின்னமனூரைப் புறக்கணிப்பு செய்து அந்தப் பகுதியில் உள்ள புறவழிச்சாலையில் சென்று விடுகின்றனா். இதனால், இந்த வழித்தடத்தில் வெளியூா் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்கள், முதியவா்கள் உள்ளிட்ட பயணிகள் ஏமாற்றமடைவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து பொதுமக்கள் மேலும் கூறியதாவது: இந்தப் பகுதியில் பேருந்து போக்குவரத்து மட்டுமே இருப்பதால் பயணிகள் அரசுப் பேருந்துகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், விதிமுறையை மீறி தன்னிச்சையாக செயல்படும் ஓட்டுநா், நடத்துநா் மீது அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.