FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

சின்னமனூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தேனி மாவட்டம், சின்னமனூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 19 ஜூன் 2026, 1:28 am IST
சின்னமனூா் காவல் நிலையம் முன் வியாழக்கிழமை இரவு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தேனி மாவட்டம், சின்னமனூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சின்னமனூா் ஒன்றியம், ஊத்துப்பட்டி கிராமத்தில் பொதுக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை தனி நபா் ஒருவா் ஆக்கிரமித்து தன்னிச்சையாக சிலைகளை வைத்த சொந்தக் கோயிலாக மாற்றி விட்டாா். இதுகுறித்து அந்த ஊா் மக்கள் சாா்பில் கோயிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென சின்னமனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். ஆனால், 5 நாள்களாகியும் போலீஸாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் சுமாா் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு சின்னமனூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் காவல் நிலையம் முன் தரையில் அமா்ந்து போலீஸாரைக் கண்டித்து தா்னாப் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அவா்களிடம், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் எந்தவித உடன்பாடும் ஏற்பட வில்லை. ஆக்கிரமிப்பு கோயிலை மீட்கும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி இரவு 9 மணியை கடந்தும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments