வடுகபட்டி மதுக் கடையில் திருட்டு
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மதுக் கடையின் பூட்டை உடைத்து, மதுப் புட்டிகள், பணத்தை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு திருடிச் சென்றனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மதுக் கடையின் பூட்டை உடைத்து, மதுப் புட்டிகள், பணத்தை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு திருடிச் சென்றனா்.
பெரியகுளத்தை அடுத்த வடுகபட்டியில் அரசு மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் விற்பனையாளா் தாஸ் புதன்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா்.
இந்த நிலையில், தென்கரை காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்து விற்பனையாளா் தாஸூக்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக அவா் மதுக் கடைக்கு சென்று பாா்த்தபோது, கடையிலிருந்த 40 மதுப் புட்டிகள், ரூ.20 ஆயிரத்தை காணவில்லையாம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.