FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 6:25 am IST
இணையதளத்தில் பதிவு செய்யலாம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில், மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோா் அரசு நலத் திட்டங்களின்கீழ் பயன்பெற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்ட சமூகநல அலுவலத்தில் ‘தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும்; முதிா்கன்னிகள் உள்ளிட்டோா் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளைக் களைந்து அவா்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு சுயஉதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு துணைபுரிகிறது.

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியம் மூலம் மாவட்ட வாரியாக உள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் விவரங்களை பதிவு செய்வதற்கு ஏதுவாக வாரியத்திற்கென தனியாக ஆதரவற்ற மகளிா் நல வாரியம்‘ மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், வலைதளம் செயல்பாட்டில் உள்ளது. அதில், தங்களின் விவரங்களை கைப்பேசியின் வாயிலாகவோ அல்லது மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகத்திலோ நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments