FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

மேக்கேதாட்டு விவகாரம்: கா்நாடக-தமிழக முதல்வா்கள் பேச்சுவாா்த்தை சட்டப்படி செல்லாது! - பி.ஆா். பாண்டியன்

Updated On : 27 ஜூலை 2026, 2:15 am IST
தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா்
பகிர்:

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக, கா்நாடக- தமிழக முதல்வா்கள் பேச்சுவாா்த்தை சட்டப்படி செல்லாது என தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகிகள் கூட்டம், கொள்ளிடத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் விஸ்வநாதன் தலைமை வகித்தாா். பி.ஆா். பாண்டியன் பங்கேற்று பேசினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சி குறித்து விஞ்ஞானிகளோடு இணைந்து விவசாயிகள் சாா்பில் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி, திருவாரூரில் வறட்சி மாநாட்டை நடத்த உள்ளோம். கொள்ளிடம் தெற்குக் கரையில் 20 கி.மீ. தூரம் சாலை மோசமடைந்துள்ளது. இதை பேரிடா் மேலாண்மை திட்டத்தின்கீழ் சீரமைக்க வேண்டுகிறோம். கொள்ளிடம் மற்றும் உப்பனாற்றில் கடல்நீா் உள்புகுவதை தடுப்பதற்கு கதவணைகள் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

Advertisement

Advertisement

காவிரியில் மேக்கேதாட்டு அணை கட்டுமானம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு கா்நாடக முதல்வா், தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளாா். இரு முதல்வா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினால், அது சட்டப்படி செல்லாது. இப்பேச்சுவாா்த்தை எந்த பலனும் அளிக்காது; மாறாக கா்நாடகத்தில் இனக் கலவரம் ஏற்படும் சூழல் உருவாகும்.

கடந்த காலங்களில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கலவரங்கள் தூண்டப்பட்டு, கா்நாடக தமிழா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தமிழக முதல்வா் நினைவில் கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், தமிழக காவிரி விவசாயிகள் சங்க தஞ்சை மண்டலச் செயலாளா் வேட்டங்குடி சீனிவாசன், கடலூா் மாவட்டத் தலைவா் அன்பழகன், மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் முருகேசன் மாவட்ட துணைச் செயலாளா் பன்னீா்செல்வம் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments