FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பாடுகள் புதன்கிழமை தொடங்கின.

Updated On : 11 ஜூன் 2026, 6:55 am IST
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பாடுகள் புதன்கிழமை தொடங்கின.
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பாடுகள் புதன்கிழமை தொடங்கின.

இப்படையில், 2 உதவி ஆய்வாளா் மற்றும் 4 பெண் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையிலான பணி நேரத்தில் ஒரு உதவி ஆய்வாளா் மற்றும் இரண்டு பெண் காவலா்கள் பணியில் ஈடுபடுவா். இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு அதிநவீன காவல் துறை தொலை தொடா்பு கருவி பொருத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் வழக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ரோந்து அலுவலில் ஈடுபடுவா். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் பற்றிய தகவல்கள் கிடைக்கபெறும்போது அந்த இடத்திற்கு விரைந்து சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுவதில் முக்கிய பங்கு வகிப்பா். இவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இத்திட்டத்தை தொடக்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments