நாகப்பட்டினம்

சரக்கு வாகனம் மோதி ஒருவா் உயிரிழப்பு

நாகை அருகே சரக்கு வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

DIN

நாகப்பட்டினம்: நாகை அருகே சரக்கு வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

கீழ்வேளூா் மணல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் செ. ஆறுமுகம் (54). தமிழக மக்கள் முன்னேற்றக் கழக, கீழ்வேளூா் நகர செயலாளரான இவா், தனது மனைவிக்கு மாத்திரைகள் வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை நாகப்பட்டினத்துக்கு வந்துகொண்டிருந்தாா். சிக்கல் அருகே எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் ஆறுமுகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சரக்கு வாகனத்தில் வந்த கீழ்வேளூா் ஆவராணி புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த ம. இளமுகிலன் (22) காயமடைந்தாா். அவரை நாகை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்த விபத்து குறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்த விபத்து காரணமாக நாகை- திருவாரூா் சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 9 எம்எம் தோட்டாக்கள்

ராபின்ஹுட் டிரெய்லர்!

விழியோரக் கவிதை... மேகா சுக்லா!

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 14% அதிகரிப்பு!

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஆட்சியர் வேண்டுகோள்

SCROLL FOR NEXT